Wednesday, February 07, 2007

தமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...

தமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது
An Evening with Tamil Music

தமிழிசை கேட்க வாரீர்!
இசைத் தமிழின் அழகு காண வாரீர்!
தமிழ் திருமுறை இசை அமுதம் பருக வாரீர்!

சிங்கப்பூரில் முதன் முதலாக தமிழ் திருமுறை இசை விழா! தென்னிந்தியாவில் தலை சிறந்த ஓதுவார் மூர்த்திகள் புகழ்பெற்ற பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கும் தமிழ் திருமுறை இசை அமுதம்.

திருமுறை இசை வழங்கும் ஓதுவார் மூர்த்திகள்:

தேவார இசைக் கலைமணி, மதுரை பொன் மு. முத்துக்குமரன்,
தேவார இசை மணி, குமார சுவாமிநாதன்

பக்கவாத்தியக் கலைஞர்கள்:

வயலின் : சங்கீத வித்துவான் கே. சிவராமன் (SIFAS)
மிருதங்கம் : வாத்தியக்கலைமணி திருவண்ணாமலை M. சிவக்குமார்
கடம் : சிங்கைப் புகழ் லயவித்துவான் S. தேவராஜன்
முகர்சங்கு : மலேசியாப் புகழ் லயச்சுடர்மணி K. பாலசுப்ரமணியன்

இடம் : ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய கலா மண்டபம்
காலம் : 19-02-2007 திங்கட்கிழமை (பொது விடுமுறை)
நேரம் : மாலை 6.30 - 9.30 மணி வரை

தமிழ் இசை அமுதத்தைப் பருகு பேரானந்தத்தில் திளைக்க அன்புடன் அழைக்கின்றோம்.

விபரங்களுக்கு ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய அலுவலகத்தில்
சிவா - 63458176,
மயூரதன் - 9833426,
சாந்தன் - 98463624,
பகீரதன் - 91460362,
கபிலன் - 90689924
ஆகியோருடன் தொடர்பு கொண்டு அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளவும்.

விழா ஏற்பாட்டுக் குழுவினர்,
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home