Thursday, July 14, 2005

நான் ஏன் எழுதுகிறேன் ? !

* எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.

* எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.

* எழுதுவதால் எனது மக்கள் இன்னமும் பலனை எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.

* எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.

* எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.

* வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால், எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.

--------- எழுத்தாளர் ஜெயகாந்தன் வானொலி உரையிலிருந்து 5, ஜூன் 1971.


எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சிலமனிதர்கள்' நாவலின் (மீனாட்சி புத்தக நிலையம் வெளியீடு) பின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home