Saturday, April 02, 2005

கவிச்சோலை

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்,'பெக் கியோ' சமூக மன்றத்தின் இந்திய இளைஞர் நற்பணிக் குழுவினருடன் இணைந்து மாதா மாதம் 'கவிச்சோலை' என்னும் கவிதைக்கான ஒன்றுகூடலை ஒழுங்கு செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு முறையும் ஒரு தலைப்புக் கொடுக்கப்பட்டு அதற்கேற்ப வரும் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று கவிதைகளுக்கு பரிசில்களும் வழங்கப்படுகின்றன.

கவிதைப் போட்டி தவிர கவிதை பற்றிய உரையாடல்கள்,புலமையாளர்களின் சொற்பொழிவுகள்கலந்துகொள்ளும் இளங்கவிஞர்களின் கவிதைகளைப் படித்தலும் நயத்தலும் என்று பல்சுவை நிகழ்வாக மாதந்தோறும் நிகழ்ந்து வருகிறது.

இம்மாத கவிச்சோலை நிகழ்வு நாளை மாலை(03/04/05) 7.00 மணியளவில் கேம்பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள பெக்.கியோ சமூக மன்றத்தில் நடைபெறவுள்ளது.சிறப்பு விருந்தினராக தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மா.கண்ணப்பன் அவர்கள் கலந்து கொண்டு 'கவிதைக்குப் பொய் அழகு அல்ல' என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.

இம்மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு 'கோல்'

இளங்கவிஞர்களும் கவிதை ஆர்வலர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home