Wednesday, July 13, 2005

இலக்கியம் என்றால் என்ன?

நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படும் போது மனிதக் குரல் களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப் பட்டு தங்களையே நகல் களாக்கிக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டே போகிறார்கள்.

மனிதமுகங்கள் வேறுபடுவதைப்போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகளும் வேறுபடுகின்றன. வேறு பட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும் சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும் போது அதில் தனித் துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் கவர்ச்சியும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையையும் தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும்(பிறர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப் படையாக இருக்கும் பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத் தான் இருக்கும்.

-------எழுத்தாளர் தி.ஜானகிராமன் சொன்னது

நன்றி: 'அம்மா வந்தாள்' -ஐந்திணைப்பதிப்பகம் (நாவலின் பின் அட்டையில் பிரசுரமாகியுள்ளது)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

1 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady

ஜெயந்தி சங்கர்..
சீரிய கருத்து...

August 12, 2005 8:27 AM  

Post a Comment

<< Home